LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காச நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் !! கடந்தாண்டில் மட்டும் 2.7 லட்சம் பேர் பலி !!

இந்தியாவில், சுமார் பத்து லட்சம் பேருக்கு, மிக மோசமாக காச நோய் பாதிப்பு இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.  

 

காச நோயின் தாக்கம் குறித்து, உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் ஆய்வு நடத்தி, அதன் அறிக்கைகளை வெளியிடுகிறது. இதன் படி இந்த ஆண்டிற்கான அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில அதிர்ச்சி தகவல்கள் பின்வருமாறு,

 

உலகில் உள்ள காச நோயாளிகளில், இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பங்கு மட்டும், 31 சதவீதம்.

 

இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேர் மிக மோசமான காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

காச நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. அதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, காங்கோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. 

 

இந்தியாவில் மட்டும், காசநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, கடந்தாண்டில் மட்டும் 2.7 லட்சம் பேர் இறந்து உள்ளனர். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அதற்கான சிகிச்சையை பெறாமலேயே, இருந்து வருகின்றனர்.  

by Swathi   on 25 Oct 2013  0 Comments
Tags: காச நோய்   இந்தியா   10 லட்சம் பேர்   2.7 லட்சம் பேர் பலி   UN Report   10 Lakhs People   Phthisis  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம் 100 சிக்னல்களில் விபத்தில்லா தேசம் பிரச்சாரம்
50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !! 50 சதவீத முதியவர்கள் குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் : ஹெல்ப் ஏஜ் இந்தியா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.