ஆற்றுப்படுகைகளிலும் மற்றும் கடற்கரைகளிலும் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்திருப்பது, தவறானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார்.
டெல்லியில் நேற்று, பசுமை தீர்ப்பாய நீதிமன்ற புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது, சமீபத்தில், 'சில நீதிமன்றங்களும், சில தீர்ப்பாயங்களும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முழுமையான 100 சதவீதம் தடை விதித்து இருப்பது வருந்தத்தக்கது. இது தவறு என்று நான் கூறுகிறேன். ஏனெனில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஆற்றில் தண்ணீரே இருக்காது. மணல்தான் இருக்கும். குறைந்த பட்சம் 3 அடி முதல் 5 அடி வரை அந்த மண்ணை அகற்றாவிட்டால், தண்ணீர் வரும்போது வெள்ளம் வீணாக கடலுக்குத்தான் போய்ச் சேரும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், வளர்ச்சியும் சம நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில் சிறிய அளவிலான மக்கள் நலன்கள், பெரிய அளவிலான மக்கள் நலன்களுக்கு விட்டுக்கொடுப்பது அவசியம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.
|