LOGO

அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் [Arulmigu aathijaganathar Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி - 623 532 ராமநாதபுரம் மாவட்டம்.
  ஊர்   திருப்புல்லாணி
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 532
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் அரசமரம் . 
சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக  சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர். ராமர், இலங்கை செல்ல பாலம் அமைத்ததால் இத்தலம் மிகவும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர்.

 

 

 

சுவாமி : ஜெகன்னாதப் பெருமாள்.

 

அம்பாள் : கல்யாணவல்லி.

 

தீர்த்தம் : ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்.

 

தலவிருட்சம் : அரசமரம்.

 

தலச்சிறப்பு : இக்கோவில் திவ்ய தேசம் 108 வைணவ சேத்திரங்களில் 44வது ஆகும்.  ஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்  பெற்றதாகும்.  புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

 

திருத்தல வரலாறு :  முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்த பெற்றனர்.  மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரச மர ரூபமாய் அவர்களை  காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்கு சக்ர தரியாய் அபய முத்ரையுடன் காட்சியளித்து  தன்னை சேவிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும் சான்னித்யமாய் அருள்  பாலிக்கிறார்.  

 

தசரதன் மகபேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000  மனைவிகள்  இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட உடனே ஆதி ஜெகன்னாத  பெருமாள் ஒரு  மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில் நகாபிரதிஷ்டை (அதாவது  இப்போது அந்த  சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின்  புத்ரகமோஷ்டி  யாகம் செய்ய பெற்றதாக கூறப்படுகிறது. 

 

இராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி செல்வது, கடலைதாண்டுவதா? யார்  உதவியை நாடுவது? தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே? என்ற ஆயாசத்துடன்  வல்வில் ராமன் சோகமயமாய் தன் தம்பி லக்ஷ்மணன் மடியில் சயனம்(படுக்கை) தலைசாய்த்து  தர்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் உபவாசம் கிடந்தார்.

 

இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில்  சிலை வடிக்கப்பட்டுள்ளது.  சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை  இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை.   ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார்.  மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன்,  சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

அரசமரத்தடியில் நாகர் சிலை

 

கருவறையைச் சுற்றிலும் இக்கதை வண்ணப்படங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பாக மிளிரும் சிற்பக்கலை போல, சித்திரக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

 

இந்தச் சன்னிதிக்கு முன்னதாக சந்தான கோபாலன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். எட்டு யானை களுடனும், எட்டு நாகங்களுடனும், ஆமையை ஆசனமாகக் கொண்டுள்ள ஆதிசேஷன் மீது கண்ணன் காட்சி தருகிறார். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், நாகதோஷமும் புத்திரதோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.

 

அதன் எதிரே கொடிமரத்துடன் கூடிய பட்டாபிராமர் சன்னிதி உள்ளது. ராவண வதம் முடித்து புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்பும் போது, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கே பட்டாபிஷேக காட்சியை ராமன் கொடுத்தாராம். இந்தச் சன்னிதியில் நின்ற நிலையில் ராமனும், அருகே தம்பி லட்சுமணனும், சீதை உடனிருக்க தோற்றம் தர அனுமன் குவித்த கரங் களோடு நிற்கிறார்.

 

இந்த திவ்விய தேசத்தில், பின்புறம் தல விருட்சமாக ஆண்டுகள் பல கடந்த அரசமரம் உள்ளது. இலையிலிருந்து வேர்வரை மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அரச மரத்தைச் சுற்றினால் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது பொதுவான கருத்து. ‘மரங்களில் நான் அரசாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கல்லவா! இம்மரத்தடியில் தான் பக்தர்கள் நாகப்பிரதிஷ்டை செய்கிறார்கள்.

 

திருப்புல்லாணி வந்து, கல்யாண ஜெகன்னாதரை சேவிக்க திருமணத் தடைகள் நீங்கும் எனவும், சந்தான கோபாலரை வணங்கி அரசமரம் சுற்றினால் மழலைப் பேறு கிடைக்கும் எனவும், ராம பிரானை வழிபட்டால் வெற்றிகள் குவியும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் தேவிபட்டிணம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் குண்டுக்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உப்பூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் எமனேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்

TEMPLES

    சடையப்பர் கோயில்     முனியப்பன் கோயில்
    சிவன் கோயில்     சாஸ்தா கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     பாபாஜி கோயில்
    அய்யனார் கோயில்     காலபைரவர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    நவக்கிரக கோயில்     அறுபடைவீடு
    சேக்கிழார் கோயில்     மற்ற கோயில்கள்
    வெளிநாட்டுக் கோயில்கள்     மாணிக்கவாசகர் கோயில்
    விநாயகர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்