பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் ஒன்று ,இது ஒரு குடைவரைக்கோயிலாகும். சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா,""ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார்.
ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்,''என கூறினார். வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கி தவமிருந்தது. தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ""உனது விருப்பம் என்ன?''என கேட்டார். அதற்கு ஆலமரம், ""தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளிகொண்டருள வேண்டும்,'' என கேட்டது. அதற்கு பெருமாள், ""திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக.
நான் திருமகளை திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்,'' என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது. |