பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தங்களது விவரங்களை இணைதளத்தின் வழியாக பதிவு செய்ய தமிழக தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுளவை, பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவ,மாணவியரும் தேர்வுத்துறை இணையதளத்தில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டை செலுத்தி தன்னுடைய சுயவிவரங்களை புகைப்படத்துடன் ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தகவல்களை சரியாக உள்ளதா என்று பள்ளி தலைமை ஆசிரியர் சரிபார்பார்.இந்த புதிய திட்டத்தால் தேர்வுப் பணிகள் பெரும் அளவிற்கு குறைக்கப்படும் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
|