LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !!

புதினா கீரை ஒரு மருத்துவ மூலிகையாகும். நிறைய ஊட்டச்சத்துடன், காரமும், மணமும் கொண்டது புதினாக் கீரை. இதில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம், கந்தகம், தாது உப்புக்கள், ஆக்ஸாலிக் அமிலம், க்ளோரின் போன்றவையும், வைட்டமின்ஏ, சி, தயாமின், ஹைப்போஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், நார்ச் சத்துக்கள் போன்றவையும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையின் இலை, தண்டு, விதை, வேர் என எல்லாப் பொருட்களுமே மருத்துவப் பயன்பாடு கொண்டவை. புதினா கீரையின் முக்கிய மருத்துவ பயன்கள் பற்றி இங்கு காண்போம்.


புதினாக்கீரையைச் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாவதோடு, புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.


வயிறுபோக்கு அதிகமாக இருந்தால், புதினா கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு குணமாகும்.


புதினாக் கீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், உதவுகின்றது. 


வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.


புதினாக் கீரையை கிள்ளி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.


புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்த பின்னர். சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். 


புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்துக்கொள்ளக்கொள்ளவேண்டும். இந்த பொடியில் தினமும் பல் தேய்த்து வந்தால், ஆயுள் முழுவதும், பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் உங்களை தீண்டாது. மேலும் பற்கள் பளபளக்கும், ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.


முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.


தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு, புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.


புதினாக்கீரையைத் துவையலாக சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.


புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்தினால், இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.


மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், வாதம், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 

by Swathi   on 12 Nov 2013  4 Comments
Tags: புதினா   புதினா கீரை   Pudina   Mentha           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
புதினா கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள் | Mint medicinal uses புதினா கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள் | Mint medicinal uses
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
புதினா கீரையின் மருத்துவ குணங்கள் !! புதினா கீரையின் மருத்துவ குணங்கள் !!
புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !! புதினா கீரையின் 12 மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
06-Jan-2015 05:50:29 சகோதரி said : Report Abuse
நான் வயிற்று வலி பிரச்சனையால் அவதி பட்டு வந்தேன்,டாக்டரை கன்சல்ட் செய்ததில் பலவிதமான மருந்துகளை உட்கொள்ளவேண்டிய நிலைமை இருந்தது,உங்கள் web siteyil புதினா கீரையின் மருத்துவ குணங்களை எதேச்சையாக படித்தேன்,நான் வீட்டில் இருந்த புதினா கீரையை உபயோக படுத்த துவங்கியதிலிருந்து ,எனக்கு இருந்த நோய்கள் குனமாவதோடு,பல மாற்றங்களும்(மாதவிலக்கு,வயிற்றின் பல நோய்கள்)எனக்கு தெரிந்தது,நான் எடுக்கும் மருந்துகளையும் படிப்படியாக குறைத்து வந்து,இப்போது முழுமையாக நிறுத்தி விட்டேன்,இப்போது புதினா கீரையை சாப்பிட்டு வருகிறேன்,மருந்தின் side effect எதுவும் இல்லாமல்,naturalaaga உபயோகிப்பதால்,எந்த பயமும் இல்லாமல் சாப்பிட முடிகிறது,பிள்ளைகளுக்கும் சாதத்தில் கலந்து கொடுக்கலாம் wish you all the best for the equipe valaitamil
 
13-Nov-2013 22:34:50 venkat said : Report Abuse
இ drank mint ஜூஸ் டெய்லி போர் பௌர்ட்ய் டயஸ் இ சபர் எயெ இர்ரிடடிஒன் . வாட் வில் இ டூ ப்ளீஸ் ரெப்ல்ய் me
 
13-Nov-2013 22:34:50 venkat said : Report Abuse
இ drank mint ஜூஸ் டெய்லி போர் பௌர்ட்ய் டயஸ் இ சபர் எயெ இர்ரிடடிஒன் . வாட் வில் இ டூ ப்ளீஸ் ரெப்ல்ய் me
 
13-Nov-2013 22:34:49 venkat said : Report Abuse
இ drank mint ஜூஸ் டெய்லி போர் பௌர்ட்ய் டயஸ் இ சபர் எயெ இர்ரிடடிஒன் . வாட் வில் இ டூ ப்ளீஸ் ரெப்ல்ய் me
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.