LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத ஆவணங்களை அளித்துள்ளதாக நிலக்கரித்துறை மீது சிபிஐ குற்றச்சாட்டு !

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், விசாரணை குழுவிடம் வழக்கிற்கு சம்பந்தமில்லாத ஆவணங்களை அளித்து நிலக்கரித்துறை அமைச்சகம், ஏமாற்றுவதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. கடந்த பாராளமன்ற கூட்டத்தொடரில், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றிருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை துறை, அறிக்கை அளித்தது, இதனால், பாராளமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கின. இதனை அடுத்து வழக்கை விசாரிக்க சிபிஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான ஆடணங்கள் தொலைந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் முறையிட்ட சிபிஐ காணாமல் போன ஆவணங்களின் பட்டியலையும் அளித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக நிலக்கரித்துறை அமைச்சகம் சிபிஐ யிடம் ஒப்படைத்தது. நிலக்கரி அமைச்சகம் வழங்கிய 12 ஆவணங்களில் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான எந்த விபங்களும் இல்லை என சிபிஐ தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

 

நிலக்கரி ஒதுக்கீட்டிற்கு முன்னர் நிலக்கரித்துறையில் நடைபெற்ற பணிகள் குறித்த விபரமும் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 29 கோப்புக்களும் அது தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. காணாமல் போன ஆவணங்கள் பற்றிய விபரங்களை 2 வாரங்களுக்குள் நிலக்கரி அமைச்சகம் சமர்ப்பிக்க வேண்டும்; அவ்வாறு வழங்காவிட்டால் விசாரணைக் குழுவால் அமைச்சகம் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்; வழக்கு விசாரணைக்கு 225 ஆவணங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் இதுவரை 12 ஆவணங்கள் மட்டுமே சிபிஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இதிலும் குளறுபடி நடைபெற்றிருப்பது  வறுத்தம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.   

by Swathi   on 03 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.