LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு

கூடங்குளத்தில் நேற்று நடந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடுதலாக 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தியும், அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கியதை கண்டித்தும் அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் 5 ஆயிரம் பேர், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் இடிந்தகரையில் இருந்து கூடங்குளம் அணுமின்நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 500 மீட்டர் தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அந்த இடத்திலேயே கடற்கரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேற்கொண்டு செல்லாமல் இருப்பதற்காக அப்பகுதியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீஸ் தடியடியை கண்டித்து இடிந்தகரையில் நேற்று மாலை முதல் 48 மணிநேரம் உண்ணாவிரத போராட்டத்தை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மைபா ஜேசுராஜ் தலைமையில் பொதுமக்கள் தொடங்கினர். அவர்கள் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் முற்றுகை போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. போராட்டக்காரர்கள் முற்றுகையில் ஈடுபடும் பகுதி 144 தடை உத்தரவு அமலில் உள்ள பகுதியில் இருப்பதால் கலைந்து செல்லுமாறு காலையில் இருந்தே போலீஸ் அதிகாரிகளும், கலெக்டரும் வேண்டுகோள் விடுத்தபடி இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கடற்கரையில் இருந்த கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.

by Swathi   on 11 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.