|
|||||
தமிழகத்தில் 144 தடை உத்தரவு !! |
|||||
நடைபெறவிருக்கும் நாடாளமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். தமிழக நாடாளமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வரை பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். தற்போது 7 ஆயிரம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு அன்று காலை 9, 11 மணி மற்றும் பிற்பகல் 1 மணிக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரத்தை கட்சிகள் முடிக்க வேண்டும். அதன்பின்னர், பொதுக்கூட்டம், தெருமுனை, மீடியா, நிகழ்ச்சிகளில் பிரசாரம் செய்ய கூடாது. வீடு வீடாக ஓட்டு கேட்பதற்கு தடையில்லை. நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது. தேர்தல் குறித்த விளம்பரத்தை நாளை மறுநாள் வரை பத்திரிகைகளில் வெளியிடலாம். ஆதார், பாஸ்போர்ட் உள்பட 12 அடையாள அட்டை மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தமிழகத்தில் தேர்தலின் போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. |
|||||
by Swathi on 22 Apr 2014 1 Comments | |||||
Tags: 144 Rule Tamilnadu 144 Rule 144 தடை உத்தரவு தமிழகம் நாடாளமன்ற தேர்தல் | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|