LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குமரி திருவள்ளுவர் சிலை 14-வது ஆண்டு நிறைவு விழா

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 14-வது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை தமிழறிஞர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையமும், குமரி மாவட்ட தமிழ் அமைப்புகளும் இணைந்து இவ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 1.1.2000 அன்று நிறுவப்பட்டது. இதன் 14-வது ஆண்டு நிறைவு விழா சிலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக தனிப்படகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவுக்கு வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் தே.வேலப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.நாகராஜன், பொதுச்செயலர் எஸ்.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன், விவேகானந்த கேந்திர தலைவர் எ.பாலகிருஷ்ணன், திருவள்ளுவர் நலவாழ்வு இயக்கத் தலைவர் தியாகி கோ.முத்துக்கருப்பன்,பொதுச்செயலர் கு.சிதம்பர நடராஜன், தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.விஜயராகவன், முனைவர் கா.ஆபத்துகாத்த பிள்ளை, வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையச் செயலர்கள் தா.துரை நீலகண்டன், என்.பகவதி பெருமாள், த.செந்தாமரைச்செல்வி, ப.தர்மராஜன், தா.மது,தமிழறிஞர்கள் காவடியூர் சிவநாராயண பெருமாள், தொல்காப்பியன், பேராசிரியர். சிவமுருகன்,ஏ.எம்.டி.செல்லத்துரை, மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்று சிலை பாதத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இணைப்பு பாலம்: விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்கள் இயற்கைச் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் இடையே இணைப்பு பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

by Swathi   on 01 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.