LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நேற்றுடன் தந்தி சேவைக்கு விடை கொடுத்த இந்திய மக்கள் !

கடந்த 160 ஆண்டுகளாக மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய தந்தி சேவைக்கு பொது மக்கள் நேற்று பிரியா விடை கொடுத்தனர்.  இந்தியாவில் தந்தி சேவை முதன்முதலில் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தால் 1850–ம் ஆண்டு கொல்கத்தாவிற்கும் டையமண்ட் ஹார்பருக்கும் இடையே தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அலுவலக பயன்பாட்டிற்க்காக இருந்த தந்தி சேவை 1854–ம் ஆண்டுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. துக்க செய்திகளை மட்டுமே பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட தந்தி சேவை, நாளைடைவில் சுபகாரியங்கள், திருமண வாழ்த்து, அலுவலக விடுப்பு உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1990–ம் ஆண்டுக்கு பிறகு செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் காலடி வைத்தபிறகு செல்போன் மற்றும் இணையத்தின் பயன்பாட்டால் தந்தி சேவை முற்றிலுமாக குறைந்தது. தந்தி சேவையின் மூலம் தற்போது, ஆண்டுக்கு ரூ.75 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. ஆனால் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பராமரிப்பு பணிக்காக ரூ.100 கோடி வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.இதனால் நஷ்டத்தில் இயங்கும் தந்தி சேவையை நிறுத்திக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 160 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த தந்தி சேவை நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது. இறுதி நாளில் 1500 பேர் தங்களது உறவினர்களுக்கு தந்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 15 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.