|
|||||
1946 முதல் 1952 வரை அரசியல் |
|||||
அரசியல் நிலவரம்:1937 தேர்தலில் படு தோல்வியடைந்த நீதிக் கட்சி, 1937-40 இல் நடை பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சுயமரியாதை இயக்கத்
தலைவர் பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது, 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. அக்கட்சி இனிமேல் தேர்தல்களில் போட்டியிடாது
என்று பெரியார் அறிவித்தார். எனவே 1946 தேர்தலை நீதிக்கட்சியினர் புறக்கணித்தனர். காங்கிரசு உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும்,
வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றது. காயிதே மில்லத் முகமது இஸ்மயீல் தலைமையிலான முஸ்லீம் லீக்
காங்கிரசுக்கு முக்கிய போட்டிக்கட்சியாக இருந்தது. ஆனால் அது பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்ததனால் அதற்கு முஸ்லீம்களைத் தவிர வேறு
பிரிவினரிடையே ஆதரவு இல்லை. இவை தவிர, 1934-1942 இல் தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது.
ஆட்சி அமைப்பு:இந்திய தேசிய காங்கிரசு மிகப்பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றிருந்தாலும் உட்கட்சி பூசல்களால் உடனடியாக முதல்வரை
தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியது. தங்குதுரி பிரகாசத்தின் ஆந்திர கோஷ்டி, காமராஜரின் பிராமணரல்லாத தமிழர் கோஷ்டி, ராஜகோபாலாச்சாரியின்
பிராமணத் தமிழர் கோஷ்டி, மாதவ மேனனின் கேரள கோஷ்டி என பல பிரிவினர் காங்கிரசில் இருந்தனர். இவர்களுள் காங்கிரசின் தேசியத் தலைவர்களின்
ஆதரவைப் பெற்றிருந்த ராஜகோபாலாச்சாரி முதலில் முதல்வராக முயன்று தோற்றுப் போனார். பின்னர் உட்கட்சி தேர்தலில் பிரகாசம் காமராஜரின்
வேட்பாளர் முத்துரங்க முதலியாரை வென்று சென்னை மாகாணத்தின் முதல்வரானார். ஆனால் காங்கிரசில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நீடித்ததால்
அடுத்த ஆறாண்டுகளில் மீண்டும் இருமுறை முதல்வர்கள் மாறினர்.முதல் சட்டமன்றத் தேர்தல்:இந்தியக் குடியரசில் சென்னை மாநிலத்தின் முதல்
சட்டமன்றத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை நடைமுறைக்கு
வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி 152 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. சக்ரவர்த்தி
ராஜகோபாலாச்சாரி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டே நடைபெற இருந்தது. ஆனால் நிருவாகக் காரணங்களால் தள்ளி
வைக்கப்பட்டு 1952 இல் நடைபெற்றது. எனவே இத்தேர்தல் சில ஆவணங்களில் "சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1951" என்றும் குறிப்பிடப்படுகிறது.
அரசின் செயல்பாடுகள்:இத்தேர்தலில் 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள்.
86 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் ஒரு தொகுதியிலிருந்து மூன்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2
ஆங்கிலோ-இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். இக்காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை
தாங்கிய இந்திய தேசியக் காங்கிரசு முன்னணிக் கட்சியாக விளங்கியது. 1946ல் அமைந்த நேருவின் முதல் இந்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த
இரு அமைச்சர்கள் இத்தேர்தலின் போட்டியிட தனிக்கட்சி தொடங்கியிருந்தனர். சியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தையும் டாக்டர் அம்பேத்கர் பட்டியல்
சாதியினரின் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளையும் தொடங்கி தனித்துப் போட்டியிட்டனர்.காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இருந்தது. 1947-51 காலகட்டத்தில் ஆயுதப்புரட்சியின் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க கம்யூனிஸ்டுகள் முயன்றனர். தெலுங்கானா, மலபார், மேற்கு வங்காளம்
ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தொடங்கிய புரட்சிகளை மத்திய மாநில அரசுகள் முறியடித்து அடக்கி விட்டன. இதனால் 1951ல்
வன்முறை வழியைக் கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தை சிபிஐ தேர்ந்தெடுத்தது. இவை தவிர ஆச்சார்யா கிருபாளினியின் கிசான் மசுதூர் பிரஜா கட்சி
ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ராம் மனோகர் லோகியாவின் சோசலிசக் கட்சி ஆகியவையும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் காங்கிரசின் பெரும்
பலத்தின் முன் இவை பலவீனமாகவே இருந்தன.
அரசியல் நிலவரம்:
1937 தேர்தலில் படு தோல்வியடைந்த நீதிக் கட்சி, 1937-40 இல் நடை பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது, 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. அக்கட்சி இனிமேல் தேர்தல்களில் போட்டியிடாது என்று பெரியார் அறிவித்தார். எனவே 1946 தேர்தலை நீதிக்கட்சியினர் புறக்கணித்தனர். காங்கிரசு உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றது. காயிதே மில்லத் முகமது இஸ்மயீல் தலைமையிலான முஸ்லீம் லீக் காங்கிரசுக்கு முக்கிய போட்டிக்கட்சியாக இருந்தது. ஆனால் அது பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்ததனால் அதற்கு முஸ்லீம்களைத் தவிர வேறு பிரிவினரிடையே ஆதரவு இல்லை. இவை தவிர, 1934-1942 இல் தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது.
ஆட்சி அமைப்பு:
இந்திய தேசிய காங்கிரசு மிகப்பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றிருந்தாலும் உட்கட்சி பூசல்களால் உடனடியாக முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியது. தங்குதுரி பிரகாசத்தின் ஆந்திர கோஷ்டி, காமராஜரின் பிராமணரல்லாத தமிழர் கோஷ்டி, ராஜகோபாலாச்சாரியின் பிராமணத் தமிழர் கோஷ்டி, மாதவ மேனனின் கேரள கோஷ்டி என பல பிரிவினர் காங்கிரசில் இருந்தனர். இவர்களுள் காங்கிரசின் தேசியத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த ராஜகோபாலாச்சாரி முதலில் முதல்வராக முயன்று தோற்றுப் போனார். பின்னர் உட்கட்சி தேர்தலில் பிரகாசம் காமராஜரின் வேட்பாளர் முத்துரங்க முதலியாரை வென்று சென்னை மாகாணத்தின் முதல்வரானார். ஆனால் காங்கிரசில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நீடித்ததால் அடுத்த ஆறாண்டுகளில் மீண்டும் இருமுறை முதல்வர்கள் மாறினர்.
முதல் சட்டமன்றத் தேர்தல்:
இந்தியக் குடியரசில் சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை நடைமுறைக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி 152 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டே நடைபெற இருந்தது. ஆனால் நிருவாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு 1952 இல் நடைபெற்றது. எனவே இத்தேர்தல் சில ஆவணங்களில் "சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1951" என்றும் குறிப்பிடப்படுகிறது.
அரசின் செயல்பாடுகள்:
இத்தேர்தலில் 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 86 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் ஒரு தொகுதியிலிருந்து மூன்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ-இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். இக்காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய தேசியக் காங்கிரசு முன்னணிக் கட்சியாக விளங்கியது. 1946ல் அமைந்த நேருவின் முதல் இந்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இரு அமைச்சர்கள் இத்தேர்தலின் போட்டியிட தனிக்கட்சி தொடங்கியிருந்தனர்.
சியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தையும் டாக்டர் அம்பேத்கர் பட்டியல் சாதியினரின் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளையும் தொடங்கி தனித்துப் போட்டியிட்டனர்.காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 1947-51 காலகட்டத்தில் ஆயுதப்புரட்சியின் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க கம்யூனிஸ்டுகள் முயன்றனர். தெலுங்கானா, மலபார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தொடங்கிய புரட்சிகளை மத்திய மாநில அரசுகள் முறியடித்து அடக்கி விட்டன. இதனால் 1951ல் வன்முறை வழியைக் கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தை சிபிஐ தேர்ந்தெடுத்தது. இவை தவிர ஆச்சார்யா கிருபாளினியின் கிசான் மசுதூர் பிரஜா கட்சி ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ராம் மனோகர் லோகியாவின் சோசலிசக் கட்சி ஆகியவையும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் காங்கிரசின் பெரும் பலத்தின் முன் இவை பலவீனமாகவே இருந்தன. |
|||||
by Swathi on 24 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|