|
|||||
1999ம் ஆண்டு தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் |
|||||
இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. திராவிட
முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.நிலவரம்:1999ல் தமிழ்நாட்டில் மொத்தம்
39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 1998
நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி அரசு ஒரே ஆண்டில் அதிமுக ஆதரவை
விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியவுடன், திமுக அதில் இணைந்தது. இதனால், மூன்றாண்டுகளாக
தமிழகத்தில் செயல்பட்டு வந்த திமுக-தாமக கூட்டணி உடைந்தது.மும்முனை போட்டி: இத்தேர்தலில் மும்முனை போட்டி காணப்பட்டது. திமுக
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, சு. திருநாவுக்கரசரின் எம்ஜியார் அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக
ராஜீவ் காங்கிரசு போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை எதிர்த்து அதிமுக இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அக்கூட்டணியில்
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. இவை தவிர இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் கட்சிகளும் அதிமுக-காங்கிரசுக்கு ஆதரவளித்தன. இவை தவிர தமாக-விடுதலைச்
சிறுத்தைகள்-புதிய தமிழகம் கூட்டணியும் களத்தில் இருந்தது.தமிழக அமைச்சர்கள்:இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கராஜன்,குமாரமங்கலம்,முரசொலி
மாறன்,டி. ஆர். பாலு முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
நிலவரம்:
1999ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 1998 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி அரசு ஒரே ஆண்டில் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியவுடன், திமுக அதில் இணைந்தது. இதனால், மூன்றாண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த திமுக-தாமக கூட்டணி உடைந்தது.
மும்முனை போட்டி:
இத்தேர்தலில் மும்முனை போட்டி காணப்பட்டது. திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, சு. திருநாவுக்கரசரின் எம்ஜியார் அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை எதிர்த்து அதிமுக இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. அக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. இவை தவிர இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் கட்சிகளும் அதிமுக-காங்கிரசுக்கு ஆதரவளித்தன. இவை தவிர தமாக-விடுதலைச் சிறுத்தைகள்-புதிய தமிழகம் கூட்டணியும் களத்தில் இருந்தது.
தமிழக அமைச்சர்கள்:
இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கராஜன்,குமாரமங்கலம்,முரசொலி மாறன்,டி. ஆர். பாலு முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர். |
|||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|