LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உத்தரகண்ட் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து - 19 பேர் பலி !

மழையின் கோர தாண்டவத்தில் சிக்கியுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் மீட்பு பணியினர் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவுகளின் பாதிப்புகளால் உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். ஆங்காங்கே சிக்கியுள்ள யாத்ரிகர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை சார்பில் 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று எதிர்பாராத விதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நொறுங்கி விழுந்தது. இதில் ராணுவம், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், ஊழியர்கள் என மொத்தம் 19 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் 8 பேரின் சடலங்களே மீட்கப்பட்டன. எஞ்சியோர்களின் உடல்களை தீவிரமாக தேடிவருகின்றனர். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

by Swathi   on 25 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.