மும்பை, 19 வயதிற்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய இளம் வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சிறப்பாக ஆடி சதம் கண்டதால், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கொடி நாட்டிய இந்திய வீரர்களுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
|