LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !!

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, நண்பகல் 12.10  மணி அளவில் ரயில்வே இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்து உரையாற்றினார். 


ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:


பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணத்தில் மாற்றமில்லை.


முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்களை மொபைல் போன்கள் மூலம் பெற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது


10 பயணிகள் ரயில், 7 மின்சார ரயில்கள் உள்ளிட்ட 72 புதிய ரயில்கள் அறிமுகம்.


17 கூடுதல் கட்டணம் கொண்ட பிரிமியம் ரயில், 38 புதிய விரைவு ரயில்கள் விடப்படும்.


ரயில்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்படும். 


ரயில் சமையலறையில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படும்.


குறிப்பிட்ட ரயில்களில் இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்.


2014-15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு. 


2014-51ல் சரக்கு போக்குவரத்து பிரிவில் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு.


கூடுதலாக அதிவேக ரயில்கள் இயக்கப்படும். 


சேலம்- ஓமலூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும்.


சரக்கு ரயில்களுக்கான தனி பாதைகள் மூலம் செலவுகள் குறைந்துள்ளன.


மேகாலாயா- அருணாச்சல்பிரதேசத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.


6வது ஊதியக்குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டுள்ளன.


4,556 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.


நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 56 கி.மீ பாதை அதிகமாக மின்மயமாக்கம்.


அடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு ஒப்புதல்.

 

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை


ஜம்மு காஷ்மீரில் 11.2 கி.மீ. தூரத்திற்கு குகை பாதை


ரயில்வேயை மேம்படுத்த உடனடியாக புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.


தமிழகத்துக்கு 2 பிரீமியம் ரயில்கள், 3 பாசஞ்சர் ரயில்கள், 4 விரைவு ரயில்கள் உள்ளிட்ட 9 ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன


பாசஞ்சர் ரயில்கள்


மன்னார்குடி, மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில்


புனலூர் - கன்னியாகுமரி இடையே தினசரி பயணிகள் ரயில்


திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே தினசரி பயணிகள் ரயில்


பிரீமியம் ரயில்கள்


காமக்யா - சென்னை இடையே வாரந்திர ஏசி விரைவு ரயில்


ஈரோடு, திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் - பெங்களூரு இடையே வாரமிருமுறை செல்லும் ரயில்கள் அறிமுகம்.


விரைவு ரயில்கள்


சென்னையில் இருந்து பெங்களூருக்கு தினசரி விரைவு ரயில்,


மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு (ராஜஸ்தான்) வாராந்திர விரைவு ரயில், 


சென்னையில் இருந்து மும்பைக்கு ( வழி - குல்பர்க்கா) வாராந்திர விரைவு ரயில்,


நாகர்கோவில் இருந்து கச்குடாவுக்கு வாராந்திர விரைவு ரயில், 


காட்பாடி வழியாக செல்லும் ஹவுரா, யஷ்வந்த்பூர் இடையேயான ஏசி வாராந்திர விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


15 நிமிடங்களில் முடிந்த பட்ஜெட் உரை


தெலங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர மாநில எம்.பி.க்களின்  கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சுமார் 15 நிமிடங்களிலேயே மல்லிகார்ஜூன கார்கே தனது பட்ஜெட் உரையை முடித்தார். இதனையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

by Swathi   on 12 Feb 2014  0 Comments
Tags: ரயில்வே பட்ஜெட் 2014   ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகள்   ரயில்வே பட்ஜெட் அம்சங்கள்   மத்திய ரயில்வே பட்ஜெட்   Railway Budget 2014   Railway Budget   Announcement of Railway Budget  
 தொடர்புடையவை-Related Articles
2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !! 2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !!
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !! ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.