இந்த ஆண்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழக திரையரங்குகளை வலம் வந்தாலும், அவற்றில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கே வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை இருக்கிறது.
இந்த ஆண்டில் அதிக பட்சமாக 100 கோடி ரூபாய் வசூலை மூன்று தமிழ் படங்கள் தாண்டியுள்ளதாம். அதில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தம்மன்னா நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான வீரம் படம் 130 கோடி ருபாய் வசூல் செய்துள்ளதாம்.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா நடித்த நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த லிங்கா திரைப்படம் 3 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது, என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மீடியாக்களில் வெளிவந்தன. மேற்சொன்ன மூன்று படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலை உண்மையிலேயே அள்ளியதா இல்லையா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.
|