|
|||||
தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !! |
|||||
நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் கருத்து கணிப்புக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேவையான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் கருத்துக் கணிப்புகளை வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வரும் 24 ஆம் தேதி வரை தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட நாளேடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் 3 நாட்களுக்கு மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் வழக்கும் பதிவு செய்யப்படும் என பிரவீன்குமார் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 21 Apr 2014 0 Comments | |||||
Tags: Polls Survey Parliament Survey தேர்தல் கருத்து கணிப்பு தேர்தல் ஆணையம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|