LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2017-2018 கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

தாய் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட சேவை செய்வதே ஆனந்தமாகக் கொண்ட, அறிவாற்றல், பொறுமை, தியாகம் போன்ற நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

தங்கள் இராசிக்கு ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு – ஆவணி 27 ஆம் தேதியன்று சுக பவமான துலாத்திற்கு மாறுகிறார். குரு நான்கில் வந்த போதுதானே தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். பண இழப்புகளைத் தவிர்க்க இவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட்டால் மனக்கவலை அதிகமாகும்தானே, குடும்பத்தில் நிம்மதி குறையும் தானே. கவனமாக இருங்கள். 4 ஆம் வீடு என்பது 3 க்கு இரண்டாம் வீடாவதால் இளைய சகோதரர் மூலமாக தன வருமானங்கள் இருக்கும். 5 க்கு விரயம் ஆதலால் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுற்றங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நான்கு கால் பிராணிகளிடம் எச்சரிக்கை தேவை. சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் பணியினில் சிக்கல்களும், வருமானக் குறைவுகளும் ஏற்படும். காதல் விவகாரங்களில் வீண்பழி சுமத்தப்படலாம். பிறர் செய்த குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டு தேவையற்ற தண்டனைகள் கூட சிலருக்குக் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. வெளி மாநிலங்களில் சென்று வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளி நாட்டில் வேலை பார்த்தவர்கள் தாய்நாடு திரும்பு நேரிடும். புதிய தொழில் வாய்ப்புகள் சிரமத்திற்குப் பிறகே ஏற்படும். உயர்கல்வி படிப்பவர்கள் கவனச் சிதறல்களுக்கு ஆளாகாமல் கவனமாகப் படித்தாலே தேர்ச்சி பெற முடியும். நல்ல நட்புக்களை நாடிச் செல்வதே நல்லது. தச்சு வேலை, கட்டிட வேலைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பிரிந்து வேறு இடத்தில் வேலே செய்ய வேண்டியதிருக்கும.

குரு தனது 5 ஆம் பார்வையால் 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மர்ம ஸ்தானத்தில் ஏற்பட்ட நோய்கள் மறையும். மரண பயம் விலகி ஆயுள்பலம் உண்டாகும். மனைவி மூலமாக வரும் தனத்துக்குப் பஞ்சம் இராது. தடைகள் விலகி மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். உடல் பாதிப்பால் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் ஏற்படும். அதை தைரியமாக மேற்கொள்டு சுகம் பெறலாம்.

குரு தனது 7 ஆம் பார்வையாகப் 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக தேறாது என முடங்கிய தொழில்கள் கூட துளிர்த்து எழும். உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கை கூடிவந்து மகிழ்ச்சி தரும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த வங்கிக் கடன் உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர்.

குரு தனது 9 ஆம் பார்வையாக 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். உண்ண உணவு, சுகமான நித்திரை ஆகியவற்றிற்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றிக் கொடியை நாட்டுவீர்கள். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி இணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. குடும்பத்தில் நிலவி வந்த சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.

கடக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

வேலையில் எப்பொழுதும் கவனம் தேவை. புதிய வேலையை உறுதி செய்தபின் பழைய வேலையை விடுதல் வேண்டும். கிடைத்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். எதிலும் நிதானம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடமும் சற்று கவனமுடன் பழகுதல் வேண்டும். வெளிநாடு வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். அரசு மற்றும் தனியார் துறையில் எதில் முதலில் வேலை வந்தாலும் ஒப்புக் கொள்ளல் வேண்டும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் ஒரு சில பிரச்சனைகளும் ஏற்படும்.

தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)

சுயதொழில் மற்றும் கூட்டுத் தொழில் புரிபவர்கள் ஓரளவு நற்பலன் அடைவர் ஏற்றுமதி இறக்குமதி ஓரளவு பரவாயில்லாமல் அமையும். பங்குச்சந்தை ஓரளவு லாபகரமாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகள் சேவைத்துறைகள் லாபகரமாக அமையும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, செய்தி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, துறைகள் ஏற்றமானதாக இருக்கும். விஞ்ஞானம் கெமிக்கல் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரண, விளையாட்டுச் சாமான்கள், பிளாஸ்டிக், மருந்து சார்ந்த துறைகள் சற்று சுமாராகவே இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ், பொறியியல், ரியல் எஸ்டேட் நல்ல லாபகரமாகவே இருக்கும். இரும்பு, எஃகு, கனிமவளங்கள் துறை லாபகரமாக இருக்கும். ரோட்டோர வியாபரிகள் ஓரளவு நல்ல லாபம் அடைவர்

விவசாயம்

விவசாயம் எதிர்பார்த்த வருமானத்தை ஓரளவு தரும். லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்கள், புதிய தோட்டங்கள் பண்ணைகள் ஒரு சிலர் வாங்க வாய்ப்பு ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் அமையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசால் ஆதாயம் ஏற்படும்.

அரசியல்

எதிர்பார்த்த பெயரும் புகழும் அமையும். அரசால் நற்பலன்கள் அமையும். எதிர்பாராத தனவரவுகள் அமையும். தொண்டர்களின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். அரசியல் மகிழ்ச்சிகரமாக அமையும். வழக்குகள் அதிகப்படியான கவலைகள் உண்டுபண்ணும்.

கலைஞர்கள்

இசை, ஓவியம், சினிமா, டி.வி. போன்ற கலைத்துறையில் இருப்பவர்கள் ஓரளவு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வாய்ப்பு அமையும். ஜோதிடம் மற்றும் மற்ற கலைத்துறைகள் லாபகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் புதிய ஊதிய உயர்வும் அமையும்.

மாணவர்கள்

ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைத்து படிக்க சந்தர்ப்பங்கள் அமையும். கடன் வாங்கி படிக்கவும் ஒரு சிலருக்கு வெளிநாட்டில் படிக்கவும் வாய்ப்புகள் அமையும்.

பெண்கள்


இல்லத்தரசிகளின் ஆசைகளும் அபிலாஷைகளும் பூர்த்தியாகும். இதுகாறும் நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியம் நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு 2வது திருமணத்திற்கும் வழிவகுக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் பிரச்சனைகள் இருந்தாலும் வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். உடன் பணிபுரிபவர்கள் நல்ல ஒத்துழைப்பு நல்குவர். உயர் அதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். எனவே எச்சரிக்கை தேவை. நரம்பு சம்பந்தமான மற்றும் சளித்தொல்லைகள் வர வாய்ப்புள்ளதால் உடல்நலத்தில் கவனம் தேவை. மேலும் தலை, கால், மற்றும் அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.

உடல் ஆரோக்யம்

அறுவை சிகிச்சைக்கான காலமிது, தலை, அடிவயிறு கால் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உப்பு, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் அவசியம்.

கடகத்திற்கு –
சுவர்ண மூர்த்தியாகி விளங்குவதால் அசுப பலன் பெரும்பாலும் குறையும். (4) 70%

by Swathi   on 10 Aug 2017  1 Comments
Tags: Guru Peyarchi Palangal   2017 - 2018 Guru Peyarchi Palangal   Kadaka Rasi Guru Peyarchi Palangal   2017 Guru Peyarchi Kadaka Rasi Palangal   Kadaka Rasi Guru Peyarchi   2017 Kadaka Rasi Guru Peyarchi Palangal   கடக ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 துலாம் ராசி(Thulam Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 துலாம் ராசி(Thulam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 கன்னி ராசி(Kanni Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 சிம்ம ராசி  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
கருத்துகள்
17-Sep-2018 12:56:07 Esakkiammal said : Report Abuse
என் காதல் வெற்றி பெறுமா கடகம் பூசம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.