எத்தனையோ இன்ப,துன்பங்கள் வந்து சென்றலும் சாகும் நாள் தெரிந்தால் மனிதனின் வாழ்கையே நரகமாகிவிடும். அப்படிதான் நம்மில் சிலர் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கு காரணம் 21.12.2012 தேதியுடன் இந்த உலகம் அழியும் என்ற சில வரலாற்று குறிப்புகள் தான்.உலகம் அழியப்போகிறது என்று கூறும் ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்கு வழு சேர்க்கும் வகையில் சில சான்றுகளை முன் வைக்கின்றனர்.அதை பற்றியும், உலகம் அழியுமா ! அழியாதா ! என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
21 - ம் தேதியுடன் முடிகிறது மாயன் கலண்டர் :
ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தென் அமெரிக்காவில் மாயன் என்ற ஒரு இனம் வாழ்ந்து வந்தது.இவர்கள் வானவியல்,கட்டிடவியல்,கணித சூத்திரங்கள் ஆகியவற்றில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.இவர்களது காலத்தில் கணிதம் மற்றும் வானவியலின் அடிப்படியில் காலண்டர் ஒன்றை உருவாக்கினர்.அதுதான் தற்போது மாயன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் மாயன் காலண்டர் மூலம் கணித்து வைத்துள்ளனர். சூரியன் காலாவதியாகும் தேதியையும் இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புவியின் துருவங்கள் இடம் மாறும் :
பூமியில் காந்தப் புலம் வடக்கு, தெற்காக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது.ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் சூழ்நிலையில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு நொடியில் சாம்பலாகிவிடுமாம்.இந்த நிகவும் மாயன் கலான்டரில் சொல்லப்பட்டதே,இதை விஞ்ஞானிகள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பனிப்புயல் :
சூரியனில் உருவாகும் பனிப்புயல் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு,எரிமலை வெடிப்பு,அல்லது ஒரு பெரிய விண்கல் பூமியை தாக்கி அளித்து விடும் என்றும் சூரியனை ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.
உலகம் அழிவதை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது ?
கண்டிப்பாக 2012-ம் வருடத்தில் உலகம் அழியாது என பல வனவியல் விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர்.மேலும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள்.அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அதை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கும் வசதிகள் நம்மிடம் தற்போது உள்ளது.பலர் 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து மியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது என நமக்கு மிகுந்த நம்பிக்கையை தருகின்றனர் வனவியல் விஞ்ஞானிகள்.
|