LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

24 ஆண்டுகள் முன் நடந்த போலி என்கவுண்டர்: 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ கோர்ட்டு தீர்ப்பு!

24 ஆண்டுக்கு முன்பு நடந்த போலி என்கவுண்ட்டர் வழக்கில், மேஜர் ஜெனரல் உள்பட வீரர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் 5 பேரை 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமெண்ட் படை வீரர்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இவர்கள் 5 பேரும் உல்பா பயங்கரவாதிகள் என்று ராணுவ தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் 5 பேரும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,  இது போலியாக நடத்தப்பட்ட என்கவுண்ட்டர் என்றும்  குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை ராணுவ கோர்ட்டில் நடந்து வந்தது. 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது ராணுவ கோர்ட்டு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவ மேஜர் ஜெனரல் ஏ.கே.லால், கர்னல்கள் தாமஸ் மாத்யூ, ஆர்.எஸ்.சிபிரென், படை வீரர்கள் திலீப் சிங், ஜக்தியோ சிங், அபிந்தர் சிங், ஷிவேந்தர் சிங் ஆகியோர் போலி என்கவுண்டரில் ஈடுபட்டது உண்மை என்பதை உறுதி செய்தது. மேலும் இவர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனேவால், அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் தீபங்க குமார்நாத் ஆகியோர் வரவேற்று உள்ளனர். 

“மக்கள் நீதித்துறையின் மீதும், ராணுவத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இந்தத்தீர்ப்பு அமைந்து உள்ளது” என்று சர்பானந்தா தெரிவித்து உள்ளார்.

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.