இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கல்வி அபிவிருத்தியை தரும் ஸ்தலம்.கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இங்குள்ள
கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம்
(அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி
உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி.வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. இந்த அம்பாளே பிரதான
அம்பாளாக இருக்கிறார்.மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.இது சுயம்புலிங்கம் என்பதால் "தான்தோன்றீயீசர்' என்றும் பெயர்
உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சந்நிதியும்,
நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.
சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு "இனன்' என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் " இனன் நம்பு
ஊர்' என்று பெயர் ஏற்பட்டு "இன்னம்பூர்' என்று மாறிவிட்டது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கல்வி அபிவிருத்தியை தரும் ஸ்தலம். கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அநுக்கிரகம் என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது.
இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி. வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. இந்த அம்பாளே பிரதான அம்பாளாக இருக்கிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இது சுயம்புலிங்கம் என்பதால் "தான்தோன்றீயீசர்' என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது.
அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சந்நிதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு "இனன்' என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் " இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு "இன்னம்பூர்' என்று மாறிவிட்டது. |