இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தஸ்தான தலங்களில் ஆறாவது த லம். அப்பரால் மடம் அமைக்கப்பட்ட
சிறப்புடையது. அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம். அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம். இத் தலத்தில் நந்தி
விலகியுள்ளது. கோஷ்டமூர்த்தங்களில் வீணா தெட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மகிடனை யழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக்
காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும் பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச்
சிறப்புடையன. பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம். காசிபமுனிவரின் கடும் தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இங்குள்ள கிணற்றில் 13
கங்கையையும் பொங்கி எழச்செய்து ஆடி அமாவாசை அன்று காட்சி தந்த தலம். இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.கோஷ்டப் பிரகாரத்தில்
வீணாதட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், பிஷாடனரும் காட்சியளிக்கின்றார். பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் வரலாற்றுச்
சித்திரங்கள் உள்ளன. சோமாஸ்கந்த மண்டபம், நடராஜர் சபையும் உள்ளது
இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தஸ்தான தலங்களில் ஆறாவது த லம். அப்பரால் மடம் அமைக்கப்பட்ட சிறப்புடையது. அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம். அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம். இத் தலத்தில் நந்தி விலகியுள்ளது. கோஷ்டமூர்த்தங்களில் வீணா தெட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது.
மகிடனை யழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும் பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம். காசிபமுனிவரின் கடும் தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இங்குள்ள கிணற்றில் 13 கங்கையையும் பொங்கி எழச்செய்து ஆடி அமாவாசை அன்று காட்சி தந்த தலம்.
இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.கோஷ்டப் பிரகாரத்தில் வீணாதட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், பிஷாடனரும் காட்சியளிக்கின்றார். பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் வரலாற்றுச் சித்திரங்கள் உள்ளன. சோமாஸ்கந்த மண்டபம், நடராஜர் சபையும் உள்ளது. |