இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது
விசேஷம். பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து
வழிபட்டதாக சொல்கிறார்கள்.இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில்
இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை
விநாயகர்.இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த
அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட
தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், "ராமநாதீச்சரம்' என்று
அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், "ராமநந்தீச்சரம்' என்ற பெயரும் உண்டு.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள். இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது.
108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள சோமாஸ்கந்தர் மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும்.
ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், "ராமநாதீச்சரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், "ராமநந்தீச்சரம்' என்ற பெயரும் உண்டு. |