இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது
வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில்
வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன்
தரிசனம் செய்வது அபூர்வம். திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் "புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின்
முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரகாரத்தில் நடராஜர், சுப்பிரமணியர், பூரணா, புஷ்லையுடன் ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில்
வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் சிவன், லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம்
பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். சிவன், வேடன் வடிவில் வந்ததால்
இவ்வூர் "வேட்டக்குடி' என்றும், அம்பாள், மீனவப்பெண்ணாக பிறந்த தலம் என்பதால், "அம்பிகாபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர்
சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கூடியது.
இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் "புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரகாரத்தில் நடராஜர், சுப்பிரமணியர், பூரணா, புஷ்லையுடன் ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது.
கருவறையில் சிவன், லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். சிவன், வேடன் வடிவில் வந்ததால் இவ்வூர் "வேட்டக்குடி' என்றும், அம்பாள், மீனவப்பெண்ணாக பிறந்த தலம் என்பதால், "அம்பிகாபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. |