|
|||||
இந்தியாவில் படிப்பறிவு இல்லாதோரின் எண்ணிக்கை 29 கோடி !! |
|||||
இந்தியாவில் சுமார் 29 கோடி பேர், கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர் என, ஐ.நா., தனது அறிக்கையில் கூறியுள்ளது.
உலக நாடுகளில், மக்களின் கல்வி அறிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு மேற்கொண்டு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
இந்தியாவில் கல்வியறிவு இல்லாத பெரியவர்களின் எண்ணிக்கை, 28.7 கோடியாக உள்ளது.
வசதி படைத்த இந்திய இளம்பெண்கள், சர்வதேச அளவில், கல்வியில் உயர்ந்துள்ளனர். ஆனால், ஏழை பெண்கள், இந்த நிலையை அடைய, இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.
இந்தியாவில் ஆரம்ப கல்விக்கு, அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
ஏழை நாடுகளில், நான்கில் ஒருவர், ஒரு வாக்கியத்தை கூட, சரியாக படிக்க இயலாத நிலையில் உள்ளார்.
கேரளாவில், ஒவ்வொரு மாணவருக்கும், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
இந்தியாவின் வளமான மாநிலங்களில் உள்ள ஏழை மாணவியர், கணக்கு பாடத்தில் போதிய திறன் இல்லாமல் உள்ளனர்.
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில், குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியை, மாணவர்கள் முடித்து விடுகின்றனர். இந்த மாநில கிராமங்களில், மாணவர்களை விட மாணவியர் படிப்பில் கெட்டிக்காரர்களாக உள்ளனர்.
இவ்வாறு, ஐ.நா., தனது அறிக்கையில் கூறியுள்ளது. |
|||||
by Swathi on 29 Jan 2014 0 Comments | |||||
Tags: கல்வியறிவு படிப்பறிவு இந்திய கல்வியறிவு சதவீதம் படிக்காதவர் படிப்பறிவு இல்லாதவர் Un Educated Peoples illiterate adults India | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|