LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் படிப்பறிவு இல்லாதோரின் எண்ணிக்கை 29 கோடி !!

இந்தியாவில் சுமார் 29 கோடி பேர், கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர் என, ஐ.நா., தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 

உலக நாடுகளில், மக்களின் கல்வி அறிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு மேற்கொண்டு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

 

இந்தியாவில் கல்வியறிவு இல்லாத பெரியவர்களின் எண்ணிக்கை, 28.7 கோடியாக உள்ளது. 

 

வசதி படைத்த இந்திய இளம்பெண்கள், சர்வதேச அளவில், கல்வியில் உயர்ந்துள்ளனர். ஆனால், ஏழை பெண்கள், இந்த நிலையை அடைய, இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். 

 

இந்தியாவில் ஆரம்ப கல்விக்கு, அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. 

 

ஏழை நாடுகளில், நான்கில் ஒருவர், ஒரு வாக்கியத்தை கூட, சரியாக படிக்க இயலாத நிலையில் உள்ளார். 

 

கேரளாவில், ஒவ்வொரு மாணவருக்கும், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. 

 

இந்தியாவின் வளமான மாநிலங்களில் உள்ள ஏழை மாணவியர், கணக்கு பாடத்தில் போதிய திறன் இல்லாமல் உள்ளனர். 

 

தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில், குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியை, மாணவர்கள் முடித்து விடுகின்றனர். இந்த மாநில கிராமங்களில், மாணவர்களை விட மாணவியர் படிப்பில் கெட்டிக்காரர்களாக உள்ளனர். 

 

இவ்வாறு, ஐ.நா., தனது அறிக்கையில் கூறியுள்ளது.

by Swathi   on 29 Jan 2014  0 Comments
Tags: கல்வியறிவு   படிப்பறிவு   இந்திய கல்வியறிவு சதவீதம்   படிக்காதவர்   படிப்பறிவு இல்லாதவர்   Un Educated Peoples   illiterate adults India  
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் படிப்பறிவு இல்லாதோரின் எண்ணிக்கை 29 கோடி !! இந்தியாவில் படிப்பறிவு இல்லாதோரின் எண்ணிக்கை 29 கோடி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.