LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2-ஜி ஊழல் விவகாரம்: ஆ.ராசாவை சாட்சியாக அழைப்பதற்கு அவசியம் இல்லை!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அலைக்கற்றை ஊழல் வழக்கில் தன்னையும் ஒரு சாட்சியாக அழைத்து நாடாளுமன்றக்  கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இதே போல குழுவின் உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தாவும், குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்துக் கேட்ட கேரளச் செய்தியாளர்களுக்கு பி.சி.சாக்கோ கூறிய பதில்:

இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே அனைத்து முக்கியமான சாட்சிகளையும் அழைத்து, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனவே இப்போது,  ராசாவைச் சாட்சியாக  அழைப்பது தவிர்க்க முடியாதது அல்ல. தன்னையும் சாட்சியாக அழைக்குமாறு அவர் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதேபோல் வேறு சிலரும் சாட்சியாக விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அழைப்பதென்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. எனினும், இந்தப் பிரச்சினையில் நாடாளுமன்றக்  கூட்டுக் குழுவின் மற்ற உறுப்பினர்களோடு கலந்தாலோசித்துத்தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.

ராசாவின் பெயர் சாட்சிகளின் பெயர்ப்பட்டியலில் இருந்ததாக தாஸ்குப்தா கூறுவது தவறானது. ஏனெனில் சாட்சிகளின் இறுதிப் பெயர்ப்பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. நாடாளுமன்றக்  கூட்டுக் குழுவின்  அனைத்து உறுப்பினர்களுமே தங்களது சாட்சிப் பெயர்ப் பட்டியல்களை அளித்துள்ளனர். எனினும், இறுதியான சாட்சிப் பெயர்ப் பட்டியலை ஜே.பி.சி. தயாரிக்கவில்லை.

இவ்வாறு பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.

by MAYIL   on 03 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.