|
|||||
கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் சித்தராமையா ! ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார் ! |
|||||
கர்நாடக சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக கடந்த 9ம் தேதி சித்தராமையா
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று பெங்களூர் கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் காலை 11.40 மணிக்கு கர்நாடகாவின் 22வது முதல்வராக சித்தராமையா
பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான்,
மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் சித்தராமையா விதானசவுதாவுக்கு சென்றார். அங்கு தலைமைச் செயலர்
ரங்கநாத் மற்றும் அனைத்து துறை செயலர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு ரேஷனில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் உத்தரவுக்கான கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். இந்த
திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
கர்நாடக சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக கடந்த 9ம் தேதி சித்தராமையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று பெங்களூர் கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் காலை 11.40 மணிக்கு கர்நாடகாவின் 22வது முதல்வராக சித்தராமையா பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான்,
|
|||||
by Swathi on 14 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|