தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதக் கப்பல் தொடர்பாக 'ரா' உளவுப்பிரிவு அதிகாரிகள், கப்பல் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 11 ம் தேதி ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உள்பட 35 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்க கப்பல், அனுமதியின்றி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததால் தான் சிறைபிடிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கப்பல் ஊழியர்களிடம் கியூ பிரிவு போலீசார், கப்பல் பயணம் செய்த விவரம், ஆயுதங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும், மீனவர்களிடம் டீசல் வாங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|