|
|||||
முடி உதிர்வை நிறுத்த 5 டிப்ஸ் !! |
|||||
நமது உடலின் அழகில் முக்கிய பங்கு வகிப்பதில் தலைமுடியும் ஒன்று. நாம் குழந்தையாக பிறக்கும் போது, தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது வழக்கமான ஒன்று. ஆனால், உதிரும் முடிகளின் எண்ணிக்கையில் அதிகரித்தால், நமது அழகே கேள்விக்குறியாகிவிடும். இப்படி நம் அழகிற்கே உலை வைக்கும், முடி உதிர்வு பிரச்னைக்குரிய தீர்வுகள் பற்றி இங்கு காண்போம்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும்.
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துவர முடிகொட்டுவது நிற்பதோடு, முடியும் நன்றாக வளரும்.
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். |
|||||
by Swathi on 29 Oct 2013 12 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|