LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் 60 கோடி பேருக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை !!

இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் வசிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

மக்களுக்கு கழிப்பறையின் சுகாதாரத்தையும், அவசியத்தையும் உணர்த்தும் விதமாக, ஆண்டு தோறும் நவம்பர் 19ம் தேதி, உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று கடைபிடிக்கப்பட்ட இந்த தினம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும், சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதில் இந்தியாவில் மட்டும், 60 கோடி பேர், கழிப்பறை வசதி இல்லாமல் வசிக்கின்றனர். சுகாதாரமான கழிப்பறை வசதி கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடம் வகிப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில், நேற்று நடந்த, உலக கழிப்பறை தின மாநாட்டில், அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூ பேசியதாவது, சுகாதாரமான கழிப்பறை இல்லாததால் தான், பெரும்பாலான தொற்று நோய்கள் பரவுகின்றன. இதனால், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கின்றன. கழிப்பறை வசதி இல்லாததால், தினமும் உலக முழுவதும், சுமார் 2,000 குழந்தைகள, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் இறக்கின்றனர் என கிரேஸ் பூ தெரிவித்தார்.

by Swathi   on 19 Nov 2013  0 Comments
Tags: 60 கோடி   கழிப்பறை வசதி   உலக கழிப்பறை தினம்   World Toilet Day   Defecate in Open   60 Crore Indian\'s   World Bank  
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் 60 கோடி பேருக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை !! இந்தியாவில் 60 கோடி பேருக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.