இந்தியா முழுவதும் 66 பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, மத்திய இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் லோக்சபாவில் நேற்று தெரிவித்தார். அதிகபட்சமாக மணிப்பூரில் 34 இயக்கங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று, அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் நிதி ஆதாரங்களை பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. லக்ஷர் இ தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்கள் டில்லி, உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருவதாகவும், தமிழகம் மற்றும் அசாமில் பிரிவினைவாத இயக்கங்களும் தேச விரோத இயக்கங்களும் செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
|