LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

எழுபது ருபாய்

நிலையாய்

பார்க்க மறுக்கிற கண்கள் ..


இயல்பாய்

இமைக்க மறுக்கிற இமைகள் ..


நேரே

நடக்க மறுக்கிற கால்கள் ...


தெளிவாய்

பிடிக்க மறுக்கிற கைகள் ..


எதுவுமே

நடந்து போய்

ஐந்து வினாடி கழித்து

உணர்ந்து கொள்கிற மூளை ...


சொல்லக்கூடாதென்று

மூளைச் செல்களுக்கு

உத்தரவு போட்டு

கட்டி வைத்த செய்தியெல்லாம்

கட்டவிழ்த்து விடுகிற மனது ..


சின்னச் சின்னக்

காயங்களையெல்லாம்

யோசித்து யோசித்து

ஆழமாக்கி கொள்கிற

அநாகரிக புத்தி ..


மரியாதைக்

குரியவர்களையெல்லாம்

மரியாதச் சட்டை கழற்றி

ஏளனப் படுத்துகிற

மனப்பான்மை ..


கட்டிக் காப்பாற்றிய

மானத்தையெல்லாம்

காற்றில் பறக்கவிடும்

புத்திசாலித்தனம் ...


மன-இறுக்கம்

குறைப்பதாய்

நமக்கு நாமே

காரணம் சொன்னாலும் ...


நம்மை அறியாது

அதிகமாகிப் போகிற

மிருகத்தனம் ..


அளவுக்கு

அதிகமானால் ...


நிலைகுலைந்து போய்

அற்பமாகிப் போகிற

ஆறாவது அறிவு ..


நண்பர்கள்

இருந்தால் வீட்டருகே ...


இல்லாவிட்டால்

ரோட்டருகே ..


நம்மோடு

நாம் இழந்த தன்மானமும் ...


எல்லாம்

அமைந்து போகும்....


கொஞ்சம்

கவனம் இருக்கட்டும் ...


அந்த

எழுபது ரூபாய்

சமாச்சாரத்துக்குள்

நம் தனித்தன்மை

இழக்கும் முன் ...


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.