சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை போல மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதல் கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட பேரவையில் நேற்று அறிவித்தார். மேலும் அம்மா உணவகங்களில் மதிய வேளையின் போது கூடுதலாக எலுமிச்சை அல்லது கருவேப்பிலை சாதம் ரூ.5-க்கு விற்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். முதல்வர்ரின் இந்த அறிவிப்புக்கு மாநகராட்சி பொது மக்கள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
|