|
|||||
குளிர்பானம் குடித்த 9 வயது கடலூர் சிறுமி பலி !! தமிழகம் முழுவதும் கலப்படம் குறித்த ஆய்வுகள் தீவிரம் !! |
|||||
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, பிரபல நிறுவனத்தின் குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து, தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தொடர்பான ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளது.
கலப்படம் உள்ள உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுபொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் கலப்படம் மற்றும் காலாவதியான குளிர்பானங்களும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுழற்சி முறையில் ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், காலாவதியான மற்றும் கலப்படமான பொருட்களை விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை வலியுறுத்தி, உணவு பாதுகாப்புத் துறை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோரக் கடைகள் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்றாலோ, காலாவதியான மற்றும் போலியான குளிர்பானங்கள் விற்பது தெரிந்தாலோ பொதுமக்கள் கீழ்கண்ட துறையினரிடம் புகார் செய்யலாம்.
உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இது போல், சென்னையில் 044 2381 3095 என்ற எண்ணிலும் புகார் கூறலாம்.
மேலும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 1913 என்ற எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் |
|||||
by Swathi on 10 Feb 2014 1 Comments | |||||
Tags: Cuddalore Girl Drinking Pepsi Pepsi Dies after Drinking Pepsi குளிர் பானம் பெப்சி கடலூர் சிறுமி பலி | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|