LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குளிர்பானம் குடித்த 9 வயது கடலூர் சிறுமி பலி !! தமிழகம் முழுவதும் கலப்படம் குறித்த ஆய்வுகள் தீவிரம் !!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, பிரபல நிறுவனத்தின் குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து, தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தொடர்பான ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளது.

 

கலப்படம் உள்ள உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுபொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் கலப்படம் மற்றும் காலாவதியான குளிர்பானங்களும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுழற்சி முறையில் ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், காலாவதியான மற்றும் கலப்படமான பொருட்களை விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை வலியுறுத்தி, உணவு பாதுகாப்புத் துறை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோரக் கடைகள் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்றாலோ, காலாவதியான மற்றும் போலியான குளிர்பானங்கள் விற்பது தெரிந்தாலோ பொதுமக்கள் கீழ்கண்ட துறையினரிடம் புகார் செய்யலாம்.

 

உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

இது போல், சென்னையில் 044 2381 3095 என்ற எண்ணிலும் புகார் கூறலாம்.

 

மேலும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 1913 என்ற எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

by Swathi   on 10 Feb 2014  1 Comments
Tags: Cuddalore Girl   Drinking Pepsi   Pepsi   Dies after Drinking Pepsi   குளிர் பானம்   பெப்சி   கடலூர் சிறுமி பலி  
 தொடர்புடையவை-Related Articles
குளிர்பானம் குடித்த 9 வயது கடலூர் சிறுமி பலி !! தமிழகம் முழுவதும் கலப்படம் குறித்த ஆய்வுகள் தீவிரம் !! குளிர்பானம் குடித்த 9 வயது கடலூர் சிறுமி பலி !! தமிழகம் முழுவதும் கலப்படம் குறித்த ஆய்வுகள் தீவிரம் !!
கருத்துகள்
13-Mar-2014 03:00:11 செல்வா said : Report Abuse
நம்ம எல்லாருக்கும் தெரியும் பெப்சி மற்றும் கோக் மனிதர்கல்லுக்கு உஹந்தடு அல்ல. அனால் நம் அரசு விற்க அனுமதித்து ஆதருகு வரியும் வாங்குது. எதுதான் நம் ஆரசு !!! தனக்கு வேனும்ன என்ன வானும்னாலும் செல்யுவங்க அதருக்கு அப்புறம் நல்லவங்க போல நடிபங்க !!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.