இலங்கை ராணுவத்தில் நான்கு மாத இராணுவ பயிற்சியை முடித்த 95 தமிழ் பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் கடந்த 2010 ம் ஆண்டு முடிவுக்கு வந்தது, போர் முடிவடைந்தாலும் தற்போது தான் முதல் முறையாக 95 தமிழ் பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி இலங்கை இராணுவ உயர் அதிகாரி இரத்தினசிங்கம் கூறியதாவது, இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்களுடன் அரசு நெருங்கிய உறவை ஏற்படுத்தவே பெண் அதிகாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க உலக தமிழர்கள் போரடி வரும் இந்த நிலையில், இலங்கை அரசு தமிழ் பெண்களை ராணுவத்தில் சேர்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|