LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முதல் தேர்வு... முழுமதிப்பெண்... 96 வயதில் அசத்தும் கார்த்தியாயினி அம்மாள் !!

"கல்வி அறிவை பெறுவதற்கு வயது ஒரு தடையே இல்லை" என்ற இந்த கூற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு மெய்ப்பிக்கும் விதமாக கேரளாவை சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மாணவி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அதில் முழு மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். 


கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மா, இவர் அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படும், முதியவர்கள் கல்வியறிவு பெரும் திட்டம் ஒன்றில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்  நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சதி என்ற ஆசிரியர் கல்வி கற்பித்து வருகிறார். இவர் கார்த்தியாயினி அம்மா வீட்டிற்கு அருகில் இருப்பதால், அவரது வீட்டிற்கே வந்து சதி பாடம் கற்பிக்கிறார். அவருடன் மற்ற சில முதியவர்களும் கல்வி கற்கின்றனர். அவர்களும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நன்றி : The News Minute

சமீபத்தில் இந்த முதிய மாணவர்களுக்கு தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 


தன் வாழ்நாளில் முதல் தேர்வை எழுதியுள்ள கார்த்தியாயினி அம்மாள்  வாசிப்பு பகுதியில் 30/30 என முழுமதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மற்ற இரண்டு பாடங்களில் அவர் பெற்ற மதிப்பெண்கள், விடைத்தாள் திருத்தத்திற்குப் பிறகு தெரியவரும்.  


இதுதொடர்பாக பேசியுள்ள கார்த்தியாணி அம்மாள், தான் படித்தது முழுமையாக கேள்வித்தாளில் கேட்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் இதைத்தொடர்ந்து தான் ஆங்கிலம் கற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த 96 வயது மாணவி..


by Swathi   on 06 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.