LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

சிக்காகோவில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் !

CHICAGO ADDRESSESS

BY SWAMI VIVEKANANDA


இறைவனது அருட்செயல்:

பேரறிஞராகிய ஆசிரியர் ஜே.எச். ரைட் சர்வமத மகாசபையை நிர்வகிக்கும் பெரியார்களுள் செல்வாக்கு மிகப்படைத்தவர். அவர் அச்சபைத் தலைவருக்கு எழுதின சிபாரிசுக் கடிதத்தில்  பல அடைமொழிகளுக்கிடையே, சுவாமி விவேகானந்தரைப் பற்றி “நமது ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்றாலும் கல்வியில் இப்பெரியாருக்கு ஒப்பாகமாட்டார்கள்” என்று வரைந்திருந்தார். சுவாமி விவேகானந்தர் கையில் போதிய அளவு பணமில்லாதிருப்பதை தெரிந்து ரயில் பயணச் சீட்டும் வாங்கிக்கொடுத்து அவரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்தார்.

சோதனைக் காலம் நிறைவுறுதல்:

சிகாகோ நகருக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சேர்ந்தது இரவு நேரம். விதி வசத்தால் சேர வேண்டிய இடத்தின் விலாசத்தை இழந்துவிட்டார். பிரயாண களைப்பால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி ஸ்டேஷனில் தங்கிவிட்டார். சொற்ப நாட்களில் அமெரிக்காவையே ஆட்டி வைக்கப்போகிறவர் நீண்ட பெட்டியின்மீது படுத்துக்கிடந்தார்.

மறுநாள் காலையில் தாம் சேரவேண்டிய இடத்தை நாடி மாளிகைகள் நிறைந்த வீதிகளில் கால்நடையாக விசாரித்துக்கொண்டே போனார். வீடுதோறும் சந்திக்க வேண்டியவரை பெயரைச் சொல்லி விசாரித்தார். சிலர் சிரித்தனர்; வேடிக்கை செய்தனர்; சீறி விழுந்தனர்; சினந்து கர்ஜித்தனர்; சிலர் இன்சொல் கூறினர். யதேச்சையாக இவர் மீது அனுதாபம் காட்டிய சீமாட்டி ஒருத்தியால் சேரவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகாசபை நிர்வாகிகளும் சிபார்சுக் கடிதத்தைப் பார்த்துவிட்டு சுவாமிகளையும் ஓர் உபந்நியாசகராக ஏற்றுக்கொண்டு இடவசதி, போஜன வசதி செய்து வைத்தனர்.

சிகாகோ சர்வமத மகாசபை:

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிகாகோ நகரில் மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஞ்ஞானம், பொருளாதாரம் என்று ஏறத்தாழ இருபது பேரவைகள் கூடிய அந்த மாபெரும் கண்காட்சியின் ஓர் அங்கம் சர்வமத மகாசபை. உலகின்கண் உள்ள எல்லா மதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அவைகளின் மேன்மைகளை ஆராயவேண்டுமென்ற பரந்த நோக்கத்துடன் சர்வமத மகாசபையானது நடாத்தப்பட்டது. 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை பத்து மணிக்கு இம்மகாசபை துவக்கப்பட்டது. எல்லா மதங்களின் மாண்புகளையும் கேட்டறிய விரும்பிய பேரறிஞர்கள் சுமார் பத்தாயிரம் பேர் ‘கொலம்பியன் ஹால்’ என்ற மண்டபத்தினுள் கூடியிருந்தனர்.

சிகாகோ மகாசபையில் சுவாமி விவேகானந்தர்

அவைத் தலைவர் அந்த மகாசபையின்  உயர்நோக்கத்தைப் பற்றி அழகிய முன்னுரையொன்று பகர்ந்தான பின்பு, உபந்நியாசகர்களை ஒருவர் பின் ஒருவராகச் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிற்பகல் நேரம். தமது முறையும் வருவதை அறிந்து ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் உடல் துடித்தது; நாவுலர்ந்தது. இந்தத் திருக்கூட்டம் தேர்ச்சி பெற்ற பிரசங்கிகளையும் திகைத்திடச் செய்யவல்லது. சுவாமிகள் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைந்து பரவசமடைந்துவிட்டார். ரிஷியின் தவவலிமை ஈண்டு திகழலாயிற்று. ஆசனத்திருந்து எழுந்திருந்து மேடையின் முன் வந்து நின்ற மகிமையே சபையோரது உள்ளத்தை ஒருவாறு கவர்ந்துவிட்டது. கம்பீரத்தொனியில்,

“Sisters and Brothers of America”

(“அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதரர்களே”)

என்றார். மேலும் அவரைப் பேசவிடாது தடுத்து, இடியிடித்தாற்போல் கரகோஷம் முழங்கிற்று. காரணம் வேறொன்றுமல்ல; பேசியவர்கள் எல்லாம் “சீமான்களே! சீமாட்டிகளே!” என்று துவங்கினர். ஆனால் உலகனைத்தையும் ஒரு குடும்பமாக பாராட்டியவர் நம் சுவாமி ஒருவரே! சர்வமத மகாசபையின் நோக்கத்தையும் அக்கணத்திலேயே அவர் பூர்த்திபண்ணி வைத்தவரானார். அமெரிக்க தேசத்தை தமது இரண்டே வார்த்தைகளால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.

It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions; and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects……

சுவாமிகள் நிகழ்த்திய “சிகாகோ பிரசங்கங்கள்” அல்லது “CHICAGO ADDRESSESS” என்ற நூலை வாசியுங்கள். அதில் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் நன்கு விளங்கும்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் முழங்கி நூறாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அவர் காட்டிய வழியில் மனத்தை செலுத்தி அவரது பணிக்கான கருவிகளாக நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டிய வேளை இது.


கட்டுரை: P.S. சுந்தர்ராஜன்

 

by Swathi   on 11 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.