LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

ஒரு காலத்தில் போதிய கல்வி வளர்ச்சி பெறாமல் இருந்த தமிழ்ச் சமூகம் இன்று வளர்ச்சி பெற்று உலகெங்கும் தொழில்துறைகளில் மேலோங்கி நிற்பது மிகப்பெரிய மாற்றமாகும்.  அடுத்த தலைமுறையினர் மேலும் தொழில்துறையில் முன்னேறி வேலை கொடுக்கும் சமூகமாக மாறுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை எட்டு கோடி பேர் வசிக்கும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட சந்தையாக விளங்குவதால் பிறமாநில  வணிகர்களும், பிறநாட்டுத் தொழில்களும் இந்த சந்தையை நோக்கி வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை சமூகப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் தொழில் சிந்தனைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகிறது. 

மேலும், எந்த புதிய கண்டுபிடிப்பு வெளிவந்தாலும் அவற்றை ஆவணப்படுத்தி,  ஆற்றல் வாய்ந்த குழுவினர் அதை ஆராய்ந்து தொழிலாக மற்ற உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், சிறு முதலீடுகளை கிடைக்கச்செய்யும்  ஒரு கட்டமைப்பு தமிழ்நாட்டில் அவசியம். தமிழக அரசின் சிறுதொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் பலவற்றைப் பயன்படுத்தி இதை நடைமுறை சார்ந்ததாக மாற்றவேண்டிய அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கண்டுபிடிப்பு கண்காட்சிகளை நடத்தி அவற்றைத் தொழிலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடவேண்டும்.  ஆங்காங்கே சில அமைப்புகள் இவற்றைச் செய்துவந்தால், அதை விரிவுபடுத்தி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கொண்டுசேர்ப்பது அவசியமாகும். 

தொழில்துறை வளர்வது வேலைவாய்ப்பு சிக்கலை ஓரளவு மட்டுமே போக்கும். முழுமையான தீர்வுக்குக் கிராம தன்னிறைவு , சுயச்சார்புத் திட்டங்களை உருவாக்கி விவசாயம், நெசவு  , மீன்பிடித்தல், குடிசைத்தொழில்கள் என்று அனைத்திற்கும் புத்துயிர் கொடுப்பது நல்ல பலனை அளிக்கும். 

அரசு, தொழிலதிபர்கள், கல்விக்கூடங்கள்  இணைந்து வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு ஒரு சரியான நீண்டகாலத்  தீர்வுத் திட்டத்தை வகுப்பது இன்றைய அவசியத் தேவையாகும். 

வாழ்க தமிழ்... 

மீண்டும் அடுத்த இதழில்  சந்திப்போம்.

அன்புடன்,

ச.பார்த்தசாரதி, ஆசிரியர்.   

by Swathi   on 08 Feb 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.