|
|||||
ஆசிரியர் பக்கம் |
|||||
ஆசிரியர் பக்கம் ஒரு காலத்தில் போதிய கல்வி வளர்ச்சி பெறாமல் இருந்த தமிழ்ச் சமூகம் இன்று வளர்ச்சி பெற்று உலகெங்கும் தொழில்துறைகளில் மேலோங்கி நிற்பது மிகப்பெரிய மாற்றமாகும். அடுத்த தலைமுறையினர் மேலும் தொழில்துறையில் முன்னேறி வேலை கொடுக்கும் சமூகமாக மாறுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை எட்டு கோடி பேர் வசிக்கும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட சந்தையாக விளங்குவதால் பிறமாநில வணிகர்களும், பிறநாட்டுத் தொழில்களும் இந்த சந்தையை நோக்கி வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை சமூகப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் தொழில் சிந்தனைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகிறது. மேலும், எந்த புதிய கண்டுபிடிப்பு வெளிவந்தாலும் அவற்றை ஆவணப்படுத்தி, ஆற்றல் வாய்ந்த குழுவினர் அதை ஆராய்ந்து தொழிலாக மற்ற உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், சிறு முதலீடுகளை கிடைக்கச்செய்யும் ஒரு கட்டமைப்பு தமிழ்நாட்டில் அவசியம். தமிழக அரசின் சிறுதொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் பலவற்றைப் பயன்படுத்தி இதை நடைமுறை சார்ந்ததாக மாற்றவேண்டிய அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கண்டுபிடிப்பு கண்காட்சிகளை நடத்தி அவற்றைத் தொழிலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடவேண்டும். ஆங்காங்கே சில அமைப்புகள் இவற்றைச் செய்துவந்தால், அதை விரிவுபடுத்தி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கொண்டுசேர்ப்பது அவசியமாகும். தொழில்துறை வளர்வது வேலைவாய்ப்பு சிக்கலை ஓரளவு மட்டுமே போக்கும். முழுமையான தீர்வுக்குக் கிராம தன்னிறைவு , சுயச்சார்புத் திட்டங்களை உருவாக்கி விவசாயம், நெசவு , மீன்பிடித்தல், குடிசைத்தொழில்கள் என்று அனைத்திற்கும் புத்துயிர் கொடுப்பது நல்ல பலனை அளிக்கும். அரசு, தொழிலதிபர்கள், கல்விக்கூடங்கள் இணைந்து வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு ஒரு சரியான நீண்டகாலத் தீர்வுத் திட்டத்தை வகுப்பது இன்றைய அவசியத் தேவையாகும். வாழ்க தமிழ்... மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். அன்புடன், ச.பார்த்தசாரதி, ஆசிரியர். |
|||||
by Swathi on 08 Feb 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|