மத்திய அரசின் சார்பில் இந்த ஆண்டு 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ சபி மகபூப், ஷேக் மகபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்கிய பிரதீப் தலப்பிலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த விகே முனுசாமி கிருஷ்ண பக்தருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்குப் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சார்பில் சமூகசேவகர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ். ராமகிருஷ்ணன் சமூக சேவகர். இவரால் சுமார் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மறுவாழ்வு மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பத்ம பூஷன் விருது 16 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பெறுகிறார்கள். சமூக சேவகருக்கான பத்ம பூஷன் விருதை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெறுகிறார். அதே வேளையில், ஏற்றுமதி தொழிற்துறை சார்ந்து பதம் பூஷன் விருதை வேனு ஸ்ரீனிவாசன் பெறுகிறார்.
|