LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.

தமிழிசை முதல் உலகத் தமிழிசை மாநாடு கண்டுள்ள இவ்வாண்டில் மார்கழி இசைத்திருவிழாவை வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் மற்றும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை இணைந்து   இணையத்தில் தொடங்கியிருப்பது தமிழிசையைப் பாட ஒரு திறந்தவெளி மேடையை உருவாக்கவும், பல திறமையானவர்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து இதில் கலந்துகொண்டு பாடி தமிழிசையையும், மார்கழியையும் கொண்டாடவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.  வலைத்தமிழ் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகத்தின் முதல்வர் இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்கள் பாடும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல், பாட்டுகளைக் கேட்டுத் தரப்படுத்துதல், வெளி நாடுகளில் தமிழ்ச் சூழல் இல்லாத நிலையிலும் பாடும் மாணவர்களை ஊக்கப்படுத்திப் பாடவைத்தல் என்று சிறப்பாகத் திட்டமிடப்பட்டு மார்கழி 1 முதல் மார்கழி 29 வரை பாடப்படுகிறது.  

ஆண்டாள் திருப்பாவையைப் பாடி  இசைப்பள்ளி முதல்வர் தொடங்கிவைக்கத் தொடர்ந்து தினமும் இந்திய நேரம் காலை 8 மணிக்கு வலையொளி(you tube) மற்றும் முகநூலில்(face book) இவை ஒளிபரப்பப்படுகிறது.   வலைத்தமிழ் எடுத்துள்ள இம்முயற்சிக்கு பலர் உலகெங்குமிருந்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.  

இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்களிடம் இசை கற்று அரங்கேற்றம் செய்த மாணவர்கள்  , இசையில் ஆராய்ச்சி செய்தவர்கள், இசை ஆசிரியர்கள், வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகத்தின் வழியே இணையம் வழி கற்கும் பல மாணவர்கள் என்று பலரும் இணைந்து இந்த விழாவில் பாடுவது குறிப்பிடத்தக்கது. 

மார்கழியில் பாடிய அனைத்துப் பாடல்களையும் கேட்டு ரசிக்க : www.YouTube.Com/ValaiTamil   , www.Facebook.com/ValaiTamil

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.