|
|||||
இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர் |
|||||
உலகின் அதிக மக்கள்தொகையும் , மனித வளமும், வரலாற்றுத் தொடர்புகளும், கலாச்சார நெருக்கமும் உள்ள இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர். இந்தச் சந்திப்பு, இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவும், இருநாட்டு உறவை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல உதவுவதாகவும் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் திரு.நரேந்திர மோதி அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி , சட்டை, துண்டில் கலந்துகொண்டது தமிழகத்தின் கலாச்சாரத்தைப் போற்றுவதாக அமைந்தது. உலகெங்கும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் சந்திப்பது தமிழகத்தின் பாரம்பரியம், மொழி, உடை, கலாச்சாரம் ஆகியவற்றை உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். மேலும் மகாபலிபுரம் நோக்கிய வெளிநாட்டினர் வருகை அதிகரிக்கும் என்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெரும் என்றும் நம்பப்படுகிறது. சீன அதிபரை வரவேற்பைப் பலமுறை தமிழில் ட்வீட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அழகான மகாபலிபுரத்தின் புகைப்படங்களைக் காண: http://www.valaitamil.com/tamilnadu-mahabalipuram-photopg257-302-1 |
|||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|