LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி - பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு !

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். 

 

சில தினங்களாக வட மாநிலங்களில் கன மழை பெய்து வருகின்றன. குறிப்பாக மலை பிரதேசமான உத்தரகண்ட் மாநிலத்தில் மழையின் கோர தாண்டவத்தால் பல லட்ச கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் மலைச்சரிவுகள் ஆங்காங்கே ஏற்பட்டு மக்களின் உயிரை காவு வாங்குகின்றன. இதுவரை 500 சாலைகள், 170 பாலங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். பின்னர் மாநில முதல்வர் விஜய் பகுகுணாவை டேராடூனில் உள்ள தலைமைச் செயலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து வெள்ள நிவாரணம் குறித்து விவாதித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நாங்கள் வெள்ளச் சேதத்தை நேரில் பார்த்தோம். அது மிகவும் மனவேதனை அளிப்பதாக இருந்தது. வெள்ள பாதிப்புக்கு 102 பேர் உயிரிழந்து விட்டதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவித்தபோதிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகிய வசதிகள் போர்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் பேரழிவு நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரூ.145 கோடி உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். மாநிலத்தில் தேசிய பேரழிவு மீட்புப் படையைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை 18 ஹெலிகாப்டர்களையும் ஒரு சி-130 ரக விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 19 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.