|
|||||
தமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். |
|||||
தமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டசபையில் 110ம் விதியின் கீழ் முதல் அமைச்சர் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே ரூ.9.66 கோடி செலவில் 3.501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கிச் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம். நாள். இடம் ஆகியவற்றுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியைப் பெற வேண்டும். ஆட்சியர் நிர்ணயிக்கும் இடங்களில் அவை இயங்கும் நகரும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டிய நாள். அரசு விடுமுறையாக இருந்தால். அடுத்த வேலை நாளில் அவை செயல்பட வேண்டும்.
நகரும் ரேஷன் கடைகளைச் செயல்படுத்த மூடக்கூடிய வாகனங்களை வாடகைக்கு அமர்த்தலாம். வாகனத்தில் எடைத்தராசு. பி.ஓ.எஸ். எந்திரம் இருக்க வேண்டும். அவற்றில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள். சிறப்பு பொது வினியோக திட்டப் பொருட்களுக்குத் தகுந்த இடப்பெயர்வு காப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்த வாகனத்தில் நகரும் ரேஷன் கடை என்ற பதாகை கட்டப்பட வேண்டும்.
இந்த திட்டத்தை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கு ஏதுவாக அனைத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன என்பதும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்தில் 401 கடைகள். காஞ்சிபுரம் மண்டலத்தில் 107. திருவள்ளூரில் 118 கடைகள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 3.501 கடைகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 பேர் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தமிழக சட்டசபையில் 110ம் விதியின் கீழ் முதல் அமைச்சர் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே ரூ.9.66 கோடி செலவில் 3.501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கிச் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம். நாள். இடம் ஆகியவற்றுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியைப் பெற வேண்டும். ஆட்சியர் நிர்ணயிக்கும் இடங்களில் அவை இயங்கும் நகரும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டிய நாள். அரசு விடுமுறையாக இருந்தால். அடுத்த வேலை நாளில் அவை செயல்பட வேண்டும். நகரும் ரேஷன் கடைகளைச் செயல்படுத்த மூடக்கூடிய வாகனங்களை வாடகைக்கு அமர்த்தலாம். வாகனத்தில் எடைத்தராசு. பி.ஓ.எஸ். எந்திரம் இருக்க வேண்டும். அவற்றில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள். சிறப்பு பொது வினியோக திட்டப் பொருட்களுக்குத் தகுந்த இடப்பெயர்வு காப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்த வாகனத்தில் நகரும் ரேஷன் கடை என்ற பதாகை கட்டப்பட வேண்டும். இந்த திட்டத்தை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கு ஏதுவாக அனைத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன என்பதும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 401 கடைகள். காஞ்சிபுரம் மண்டலத்தில் 107. திருவள்ளூரில் 118 கடைகள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 3.501 கடைகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 பேர் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
|||||
by Lakshmi G on 14 Aug 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|