LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

 

தமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
     தமிழக சட்டசபையில் 110ம் விதியின் கீழ் முதல் அமைச்சர் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே ரூ.9.66 கோடி செலவில் 3.501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கிச் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம். நாள். இடம் ஆகியவற்றுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியைப் பெற வேண்டும். ஆட்சியர் நிர்ணயிக்கும் இடங்களில் அவை இயங்கும் நகரும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டிய நாள். அரசு விடுமுறையாக இருந்தால். அடுத்த வேலை நாளில் அவை செயல்பட வேண்டும்.
     நகரும் ரேஷன் கடைகளைச் செயல்படுத்த மூடக்கூடிய வாகனங்களை வாடகைக்கு அமர்த்தலாம். வாகனத்தில் எடைத்தராசு. பி.ஓ.எஸ். எந்திரம் இருக்க வேண்டும். அவற்றில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள். சிறப்பு பொது வினியோக திட்டப் பொருட்களுக்குத் தகுந்த இடப்பெயர்வு காப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்த வாகனத்தில் நகரும் ரேஷன் கடை என்ற பதாகை கட்டப்பட வேண்டும்.
     இந்த திட்டத்தை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கு ஏதுவாக அனைத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன என்பதும் இறுதி செய்யப்பட்டுள்ளது.     
     அதன்படி சென்னை மண்டலத்தில் 401 கடைகள். காஞ்சிபுரம் மண்டலத்தில் 107. திருவள்ளூரில் 118 கடைகள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 3.501 கடைகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 பேர் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.     தமிழக சட்டசபையில் 110ம் விதியின் கீழ் முதல் அமைச்சர் கடந்த மார்ச் 30ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே ரூ.9.66 கோடி செலவில் 3.501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கிச் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம். நாள். இடம் ஆகியவற்றுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியைப் பெற வேண்டும். ஆட்சியர் நிர்ணயிக்கும் இடங்களில் அவை இயங்கும் நகரும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டிய நாள். அரசு விடுமுறையாக இருந்தால். அடுத்த வேலை நாளில் அவை செயல்பட வேண்டும்.     

நகரும் ரேஷன் கடைகளைச் செயல்படுத்த மூடக்கூடிய வாகனங்களை வாடகைக்கு அமர்த்தலாம். வாகனத்தில் எடைத்தராசு. பி.ஓ.எஸ். எந்திரம் இருக்க வேண்டும். அவற்றில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள். சிறப்பு பொது வினியோக திட்டப் பொருட்களுக்குத் தகுந்த இடப்பெயர்வு காப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்த வாகனத்தில் நகரும் ரேஷன் கடை என்ற பதாகை கட்டப்பட வேண்டும்.     

இந்த திட்டத்தை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கு ஏதுவாக அனைத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன என்பதும் இறுதி செய்யப்பட்டுள்ளது.   

      அதன்படி சென்னை மண்டலத்தில் 401 கடைகள். காஞ்சிபுரம் மண்டலத்தில் 107. திருவள்ளூரில் 118 கடைகள் தொடங்கப்பட உள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 3.501 கடைகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 பேர் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

by Lakshmi G   on 14 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.