பிரிட்டனில் வசித்து வரும் பஞ்சாப்பை சேர்ந்த கரம்சந்த்(107),கடாரி(100) தம்பதியர் உலகிலேயே அதிக நாள் வாழ்ந்த தம்பதியர் என்ற சாதனையை படைத்துள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறி விட்டனர். தற்போது, பிராட்போர்ட் பகுதியில் வசித்துவருகின்றனர். 87 ஆண்டுகளாக, ஒற்றுமையான தம்பதியராக வாழ்ந்து வரும் இவர்களுக்கு, 8 குழந்தைகளும், 28 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.இந்த சாதனையைப் பற்றி கரம்சந்த் அவர்களிடம் கேட்டபோது "அடிக்கடி, மனைவி சந்தோஷப்படும் வார்த்தைகளை மட்டுமே நான் கூறுவேன்". இந்த மகிழ்ச்சி தான் எங்களை நீண்ட நாள் இணைத்து வாழ வைத்துள்ளது,'' என, அவர் தெரிவித்தார்.உலகிலேயே, அதிக நாள் சேர்ந்து வாழும் தம்பதியர் என்ற வகையில், இவர்களது பெயர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
பிரிட்டனில் வசித்து வரும் பஞ்சாப்பை சேர்ந்த கரம்சந்த்(107),கடாரி(100) தம்பதியர் உலகிலேயே அதிக நாள் வாழ்ந்த தம்பதியர் என்ற சாதனையை படைத்துள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறி விட்டனர். தற்போது, பிராட்போர்ட் பகுதியில் வசித்துவருகின்றனர். 87 ஆண்டுகளாக, ஒற்றுமையான தம்பதியராக வாழ்ந்து வரும் இவர்களுக்கு, 8 குழந்தைகளும், 28 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.இந்த சாதனையைப் பற்றி கரம்சந்த் அவர்களிடம் கேட்டபோது "அடிக்கடி, மனைவி சந்தோஷப்படும் வார்த்தைகளை மட்டுமே நான் கூறுவேன்". இந்த மகிழ்ச்சி தான் எங்களை நீண்ட நாள் இணைத்து வாழ வைத்துள்ளது,'' என, அவர் தெரிவித்தார்.உலகிலேயே, அதிக நாள் சேர்ந்து வாழும் தம்பதியர் என்ற வகையில், இவர்களது பெயர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
|