|
|||||
ஆ - ஆவிகளை பற்றிய ஒரு திகில் படம் !! |
|||||
அம்புலி 3D படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இரட்டையர்கள் ஹரி -ஹரேஷ். இவர்கள் மீண்டும் ஆ என்ற புதிய திகில் படத்தை எடுக்க இருக்கிறார்கள். ஆ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிபடுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ். இந்த படம் முழுக்கமுழுக்க வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதையாம். ஆ ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய்,ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏடிஎம் ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் ஆ. ஆவிஉலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் தான் ஆ. அனேகமாக இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 12 May 2014 0 Comments | |||||
Tags: தமிழ் பேய் படங்கள் Pei Tamil Movie Aa Movie | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|