|
|||||
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! |
|||||
ஆதர் அடையாள அட்டையை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி அந்நியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் நீதிபதி பி.எஸ்.சவுகான், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் ஆதார் அட்டை தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுவது குறித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறும்போது, ''இந்தியாவில் சட்ட விரோதமாக அந்நியர்கள் குடியேற்றம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆதார் அட்டையால் சட்ட விரோத குடியேற்றங்கள் குறையவில்லை. ஆதார் அட்டையை பயன்படுத்தி பலர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒரு கோடி பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். வெளிநாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வருபவர்களால் எல்லையோர மாநிலங்களான அசாம் போன்ற மாநிலங்களின் கலாச்சாரங்கள் சீரழிந்து வருகிறது.
அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், அவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்றும், தாங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அல்ல என்றும் கூறுகின்றனர். அத்தகைய குற்றவாளிகளை உரிய ஆதாரங்கள் சமர்ப்பித்து நாட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்படும். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இத்தகைய பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும்'' என்றனர். |
|||||
by Swathi on 05 Feb 2014 1 Comments | |||||
Tags: Aadhaar Card Illegal Migrants Supreme Court Aadhaar Card Illegal ஆதர் அட்டை உச்ச நீதிமன்றம் அன்னியர்கள் ஊடுருவல் | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|