LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !!

உச்ச நீதிமன்ற அனுமதி அளித்தால் மட்டுமே, சமையல் காஸ் சிலிண்டருக்கான நேரடி மானியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும், என மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, அரசின் மானியம் பெற வேண்டுமானால், ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த திட்டம் 19 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு :

 

ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், அரசின் சேவைகளை பெற, ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என உத்தரவிட்டது. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யும்படி, மத்திய அரசு மேல் முறையீட்டு செய்தது.

 

இந்த மனுவையும், உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், வீரப்ப மொய்லி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :ஆதார் அட்டை என்பது, குடிமக்களை பற்றிய அடையாளத்தை அறிய உதவும், அடையாள அட்டை தான். சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால் தான், சமையல் காஸ் சிலிண்டர் உட்பட, அரசின் நேரடி மானிய திட்டங்களுக்கு, ஆதார் அடையாள அட்டை, கட்டாயமாக்கப்படும். என வீரப்ப மொய்லி கூறினார். 

by Swathi   on 09 Oct 2013  0 Comments
Tags: ஆதர் அட்டை   ஆதர் கார்டு   ஆதர் அடையாள அட்டை   வீரப்ப மொய்லி   Veerappa Moily   Aadhaar Card     
 தொடர்புடையவை-Related Articles
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !! மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !! இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!
உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !! உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !!
வாரத்தில் ஒரு நாளாவது பேருந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள் !!! வாரத்தில் ஒரு நாளாவது பேருந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள் !!!
ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !! ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.