|
|||||
உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !! |
|||||
உச்ச நீதிமன்ற அனுமதி அளித்தால் மட்டுமே, சமையல் காஸ் சிலிண்டருக்கான நேரடி மானியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும், என மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, அரசின் மானியம் பெற வேண்டுமானால், ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த திட்டம் 19 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு :
ஆதார் அடையாள அட்டை தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், அரசின் சேவைகளை பெற, ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என உத்தரவிட்டது. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யும்படி, மத்திய அரசு மேல் முறையீட்டு செய்தது.
இந்த மனுவையும், உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், வீரப்ப மொய்லி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :ஆதார் அட்டை என்பது, குடிமக்களை பற்றிய அடையாளத்தை அறிய உதவும், அடையாள அட்டை தான். சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால் தான், சமையல் காஸ் சிலிண்டர் உட்பட, அரசின் நேரடி மானிய திட்டங்களுக்கு, ஆதார் அடையாள அட்டை, கட்டாயமாக்கப்படும். என வீரப்ப மொய்லி கூறினார். |
|||||
by Swathi on 09 Oct 2013 0 Comments | |||||
Tags: ஆதர் அட்டை ஆதர் கார்டு ஆதர் அடையாள அட்டை வீரப்ப மொய்லி Veerappa Moily Aadhaar Card | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|