ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை கூறியதாவது, ஆதார் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு அஞ்சல்துறை மூலமாக, ஆதார் அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சரியான முகவரி இல்லாததால் ஏராளமான ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ளது. அவ்வாறு விநியோகிக்கப்படாமல் உள்ள ஆதார் அட்டை தபால்கள் விவரம் அஞ்சல் அலுவலக அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படுகிறது. மேலும், பட்டுவாடா செய்ய முடியாத ஆதார் அட்டைகள் விரைவில் திருப்பி அனுப்பப்பட இருக்கிறது. அதனால், ஆதர் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இதுவரை கிடைக்காதவர்கள் அஞ்சலகத்தை அணுகலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
|