அரசிடமிருந்து நேரடி மானியத்திட்டத்தை தவிர மற்ற சேவைகளை பெற ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் திட்டமிடல் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளதாவது, நேரடி மானியத்திட்டத்தில் பயன்பெற வங்கி கணக்குடன் ஆதார் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிடுதல் அவசியமாகிறது. ஆனால் வங்கிகளில் கணக்குகள் துவங்கவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றிற்கு ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என்றார்.மேலும் இந்த ஆண்டு ஜூலை26 ஆம் தேதி வரை ஆதார் அடையாள அட்டை பெற 39.36 கோடி பேர் விண்ணபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
|